வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளது – அரச அச்சகம் தெரிவிப்பு!

Tuesday, June 23rd, 2020

நடைபெறவுள்ள  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையி –  “கொழும்பு மாவட்டத்திற்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளது. மேலும் மாத்தளை, நுவரெலியா, மாத்தறை,யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, கேகாலை, காலி,  ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், திகாமடுல்ல மற்றும் மொனராகலை தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினமும் வன்னி தேர்தல் மாவட்டத்திற்குரிய வாக்காளர் அட்டைகள் நாளைய தினமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்” எனவும் அரச அச்சகர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: