வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதில் சர்ச்சை நிலை!
Tuesday, November 29th, 2016வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு உரிய மருத்துவ சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள், நாடு முழுவதும் குழப்பகரமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைளை மீறுகின்றவர்களுக்கு எதிரான அபராதத் தொகை 25,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளுக்கான அனுமதி பத்திரங்களைப் பெற முயற்சிப்பவர்களே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஊடகங்களை ஒழுங்குப்படுத்த புதிய பொறிமுறை!
தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்திற்காக புதிய கட்டடம்!
மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்கிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|