வாகனங்களின் விலை குறைந்துள்ளது – இறக்குமதியாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!

Monday, November 1st, 2021

கடுமையாக உயர்ந்திருந்த வாகனங்களின் விலை சற்று குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் வாகனங்களின் விலைகள் தற்போது நிலையான மட்டத்தில் இருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

எனினும் வாகன உதிரிப் பாகங்களின் விலைகள் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங் களால் உதிரிப் பாகங்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: