வலந்தலையில் கோர விபத்து: இளைஞர் பலி!
Friday, August 5th, 2016இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் காரைநகர் வலந்தலை பகுதியில் இன்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் வலந்தலை சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த விபத்தில் சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாயுள்ளார் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வெளிக்கள நிலையத்தின் பரீட்சை 26ஆம் திகதி ஆரம்பம்!
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
பயணத் தடை நீக்கப்பட்டதன் பின்னரும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ...
|
|