வருகின்றது பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி!

Tuesday, June 28th, 2016

பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டியை தயாரித்தள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அதன் விளைவுகளை கருத்திற்கொள்ளும்போது விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியினுள் உள்ள நபர் தூக்கி வீசப்படுவதுடன் இது இவர்களின் உயிருக்கு பாரதுரமான அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது.

இதனால், முச்சக்கர வண்டியில் பயணிப்போரின் வசதி மற்றும் பாதுகாப்பின் நிமித்தம் அதற்கான கட்டமைப்புக்களை பொருத்துமாறு இலங்கைக்கு அதிகளவில் முச்சக்கரவண்டியினை இறக்குமதிசெய்யும் நிறுவனத்திற்கு நாம் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: