வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய விசேட குழு – உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவடிக்கை!
Wednesday, January 10th, 2024
வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை உரிய குழு ஆராயும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதிவு செய்து வரி செலுத்தாத வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் வரிக் கோப்புகளைத் திறக்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆண்டுக்கு 12 இலட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும், ஏனைய நபர்கள் வரி செலுத்தும் அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தந்தையின் விபரீத முடிவு: ஆபத்தான நிலையில் பிள்ளைகள் - யாழ்ப்பாணத்தில் சோகம்!
மரண தண்டனை வேண்டும் - கருத்துக்கணிப்பில் யாழ். மக்கள்!
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளது - தகவல் அறியும் சட்டத்தின் ...
|
|
|
எதிர்வரும் வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை -...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது - தவறாக வழிநடத்தும் தரப்பினரது அறிக்கையால்தான்...
மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன்...


