வடமராட்சியில் மாடுகளுக்கு அம்மை நோய்!

Wednesday, March 8th, 2023

வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரி பிரிவில் மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் குறித்த மாட்டுப் பட்டியில் எட்டு மாடுகள் இறந்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு உதவுமாறும் பண்ணையாளர்கள் கோரி வருகின்றனர்.

குறித்த பட்டியில் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சையளிக்க இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளரும், மருதங்கேணி கால்நடை வைத்தியருமான் எஸ்.சுகிர்தன் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: