வடக்கு, கிழக்கில் 6 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

Saturday, November 24th, 2018

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீதிமன்றங்களில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாகவும் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.பி.போல், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவானாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மட்டக்களப்பு நீதிவான் எம்.ஐ.எம்.ரிஷ்வி சம்மாந்துறை நீதவானாகவும் வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.சி.ரிஷ்வான், மட்டக்களப்பு நீதவானாகவும் சம்மாந்துறை நீதவான் பைசல் வாழைச்சேனை மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சஞ்சீவ சோமரட்ண அறிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவர் திருமதி தாரணி கணேசாநாதன், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தொழில் நியாய சபையின் தலைவராகவும் மட்டக்களப்பு தொழில் நியாய சபையின் தலைவர் வி.எம்.சியான் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையின் தலைவராகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

Related posts: