வடக்கின் இரண்டாவது பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Sunday, August 1st, 2021

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், இன்று முதலாம் திகதிமுதல் இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றிலிருந்து தனியான ஒரு பல்கலைக்கழகமாக தனது செயற்பாடுகளை வவுனியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கின்றது.

முன்பதாக யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அனைத்தும் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு வடக்கு மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது வவுனியா பல்கலைக்கழகமாக குறித்த வளாகம் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் இரு பல்கலைக்கழகங்கள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: