வகுப்பறையில் விரோதம்’ – சக மாணவிகளுக்கு விசம் கலந்த நீரை கொடுத்த மாணவி – நாராம்மல பகுதி பாடசாலையில் பரபரப்பு!

Tuesday, August 15th, 2023

விசம் கலந்த நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்றையதினம் நாராம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது. 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே விசக்கலவையுடனான நீரை பருகியுள்ளனர்.

10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே தரத்தில் கல்வி கற்கும் சக மாணவிகளுடன் குரோதமடைந்தமையினால் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசத்தை கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாராம்மல பொலிஸார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: