ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடப்போவதில்லை – இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, December 21st, 2021

ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் வங்குரோத்து நிலையில் உள்ள அரசியல்வாதிகள் உருவாக்குகின்ற கதையே இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில்  காய்கறிகளிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளிற்கு இரண்டுமாதங்களிற்குள் தீர்வை காணமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து உரக்கப்பல் வந்தவேளை பிரச்சினை எழுந்தது அதன் காரணமாகவே கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் தராதரத்தின் கீழு; உரம் மீள உற்பத்தி செய்யப்பட்டு  எங்களிற்கு விநியோகிக்கப்படும் அதற்கு நாங்கள் பணத்தை  வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: