ரஸ்ய ஜனாதிபதி புட்டினிற்கு எதிராக தடைகளை விதித்தது மேற்குலகம் !
Saturday, February 26th, 2022ரஸ்ய ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் எதிராக மேற்குலக நாடுகள் தடைகளை விதித்துள்ளன.
விளாடிமிர் புட்டினிற்கும் சேர்கி லவ்ரோவிற்கும் எதிராக அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியநாடுகள் இந்த தடைகளை அறிவித்துள்ளன.
புட்டினின் சொத்துக்கள் முடக்கப்படும் அவர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடுகளின் தலைவர்களிற்கு எதிராக இவ்வாறான தடைகள் விதிக்கப்படுவது வழமைக்கு மாறான விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா மற்றும் பெலாரஸ் தலைவர்களிற்கு எதிராகவே இவ்வாறான தடைகள் சமீபத்தில் விதிக்கப்பட்டன.
அமெரிக்கா வெனிசூலா ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரே மற்றும் சிரிய ஜனாதிபதிக்கு எதிராக இவ்வாறான தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிக நீக்கம்!
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை செய்தி தொடர்பாளர்களாக உதய கம்மன்பில மற்றும் ரமேஷ் பதிரன ஆகிய இரு அமைச்...
வெளிநாட்டு வருமானம் அதிகரித்துள்ளமை நம்பிக்கையை தருகின்றது - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்ப...
|
|