ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது – பதில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
Sunday, July 17th, 2022
ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஒருபோதும் ரஷ்யா மண்டியிடாது என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ரஷ்யாவை உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மோதல் காரணமாக முழு உலகையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது எனவே உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
போராட்டம் வெடிக்கும் – கல்வியமைச்சுக்கு எச்சரிக்கை!
யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படுவதில்லை - யாழ் மாவட்ட செயலகம்...
புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள் குறித்த தமிழ்கூட்டமைப்பின் யோசனைகளை ஆராய்வதற்கு அரசு தயார் - நீதிய...
|
|
|


