யாழ். போதனா மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு 7 ஆம் திகதி திறப்பு!
Thursday, January 17th, 2019
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 600 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சைப்பிரிவு எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இந்த விபத்து சிகிச்சைப் பிரிவில் 100 பேர் தங்கக்கூடிய கட்டில் வசதிகளுடன் 3 சத்திர சிகிச்சைக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ஓர் அவசர சிகிச்சைக் கூடமும் இங்கே காணப்படும். இதன்மூலம் விபத்தில் காயமடையும் நோயாளர்கள் நேரடியாகவே இந்த விடுதியில் சேர்க்கப்படுவதோடு சாதாரண நோயாளர்கள் மற்றும் குணமடையும் நோயாளர்களும் நேரடியாகவே வெளியேறும் வசதிகளும் ஏற்படுத்தப்படும். எனத் தெரிவித்தார்.
Related posts:
மேலும் சில காலத்திற்கு பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்ப...
இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதி - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...
டிஜிட்டல் மயமாகும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


