யாழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு திடீர் விஜயம்!

Saturday, July 2nd, 2016

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண நேற்றைய தினம் பொலிஸ்நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பருத்தித்துறை, அச்சுவேலி, நெல்லியடி பொலிஸ் நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்.மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக சிவில் சமூகத்தினரால் பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தேவையான ஆலோசனைகள் பொலிஸ்மா அதிபரால் வழங்கப்பட்டது.

மேலும், பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவ்வாறு தொடர்பினை பேணுவது? குற்றங்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் உறவு பொலிஸாருக்கு எவ்வாறு தேவை? என்பது தொடர்பில் அறிவுத்தப்பட்டது.

இவ்விஜயத்தின் போது பிராந்தியத்துக்குட்பட்ட பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.ஆர்.ரஞ்சித் மாசிங்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சீ.வீ.மெதவெல ஆகியோரும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: