யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தில் புதிய கட்டடம்!

Friday, June 23rd, 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக தெரிவித்தார்.

இதுதொடர்பில் யப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்தின் ( JICA ) நிதியுதவியுடன் உடன்படிக்கை தொடர்பில் ஆலோசனை சேவை கம்பனியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.மேலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு JICA வினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றி ஆலோசனை சேவை கம்பனியினால் தெரிவுசெய்யப்பட்ட ஒப்பந்தக்காரருடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தினை வழங்குவது தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: