யாழ் சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் நலன் தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை!
Saturday, November 19th, 2022
போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் யாழ்ப்பாண சிறைச்சாலையில்; தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 பேரின் நலன்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இவர்களை ஆளூநர் கடந்த 17 ஆம் திகதி சந்தித்துள்ளார்.
தமது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கவலையுடன் இருக்கும் இந்த இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும சில நலத்திட்டங்களை இதன் போது ஆளூநர் சுட்டிக்காட்டியதாக ஆளூநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் நலனுக்கான திட்டங்களை, வடமாகாணத்திலேயே முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
0000
Related posts:
நாட்டில் மின்சார பற்றாக் குறையை தீர்க்க வருகின்றது மாற்றுத்திட்டம்!
குவைத்தில் அரசின் முடிவு: இலங்கயைர்களுக்கு ஆபத்தா?
நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது - தமிழ்க் கூட்டமைப்பினர் ஏகப் பிரதிநிதி...
|
|
|


