யாழ். கொடிகாமம் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!
Tuesday, August 17th, 2021கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கொடிகாமம் பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் கொடிகாமம் சந்தைத் தொகுதியில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன் தொடராக நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோனையில் 13 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடுவது என்றும் அன்டிஜென் பரிசோதனையில் எதிர்மறை முடிவுகள் வந்தவர்களுக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வது என்றும் அதன் பின்னர் தொற்றில்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய பின்னர் சந்தையை மீளத் திறப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாதியர் பட்டப்படிப்புக்கு ஜனாதிபதி நிதியுதவி!
தென்மராட்சியில் அண்மைக்காலமாக கால்நடைகளின் திருட்டு அதிரிப்பு!
பதவி விலகப்போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றும் அறிவிப்பு!
|
|