யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
 Friday, June 3rd, 2016
        
                    Friday, June 3rd, 2016
            
யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் பொதுமக்கள் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.
யாழ். குடாநாட்டின் பிரதான சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை, மருதனார்மடம் பொதுச் சந்தை, சுன்னாகம் மத்திய  சந்தை ஆகிய சந்தைகளில் தற்போது ஒரு கிலோ கத்தரி-400 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட்-260 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா-160 ரூபாவாகவும் என அனைத்து மரக்கறி வகைகளும் நூறு ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த அடை மழை காரணமாக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோக விவசாயச் செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாகவே மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
 
 
Related posts:
வாகன நெரிசலை தவிர்க்க வருகின்றது தூண்களின் ஊடாக பயணிக்கும் புகையிரதம்!
நாட்டை மீளக் கட்டியெழுப்ப, மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கவும் தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ச...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        