யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை! 

Saturday, February 18th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (18) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை, தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை, தெல்லிப்பழை ஒரு பகுதி, பாலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், மயிலிட்டி கரிசன் ஈ ஐந்தாவது பொறியியல் படை முகாம், பாலாலி இலங்கை விமானப்படை முகாம், பாலாலி விமானப்படை ஓய்வு கால விடுதி, வறுத்தலை விளான், வீமன் காமம், தோப்பு, அச்சுவேலி நகரம், அச்சுவேலி வைத்தியசாலை வீதி, செல்வநாயகம் புரம், பலாலி தெற்கு, பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், அச்சுவேலி வல்லை வீதி, விஜிதா மில், மூளாய் சந்தியிருந்து மூளாய் பிள்ளையார் கோவில் வரை, காங்கேசன்துறை கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
1-Copy5-620x336

Related posts: