யாழ். ஆஸ்பத்திரியில் தாயும் சேயும் மரணம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சோகம்

Thursday, November 16th, 2017

யாழ். போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்து சில மணி நேரங்களில் இறந்தது.

குழந்தை இறந்து இரண்டாம் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை தாயும் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

வளவாய் கிழக்கு அச்சுவேலியைச் சேர்ந்த 25 வயதான கஜரூபன் பிரசாந்தினி இளம் வயது தாய்க்கு கடந்த 10 ஆம் திகதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக யாழ்; போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அவர் அனுமதிக்கப்பட்டார்.

12 ஆம் திகதி இப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் சில மணி நேரங்களின் பின் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந் நிலையில் தாய் நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இறப்பு விசாரணைகளை யாழ் . போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று புதன்கிழமை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

தாயும், சேயும் இறந்தமைக்கான காரணம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts: