யாழ்ப்பாணத்து பெற்றோர்களுக்கு  பொலிஸார் எச்சரிக்கை!

Thursday, November 30th, 2017

குடாநாட்டில் போதைப்பொருள் சேர்க்கப்பட்ட இனிப்புகளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, யாழில்விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரபல பாடசாலைகளுக்கு அருகே போதை சேர்க்கப்பட்ட இனிப்புகளை விற்பனை செய்வது இவர்களின்நோக்கமாக இருந்துள்ளது.

பை ஒன்றில் மறைத்து விற்பனை செய்த இருவரை நேற்று(28) மாலை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்தசந்தர்ப்பத்தில் அவர்களிடமிருந்து சுமார் 50 இனிப்புகள் மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ் நடவடிக்கைகள் குறித்து பெற்றோரும் மாணவர்களும் அவதானமாக செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. பாடசாலைகளை இலக்கு வைக்கும் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Related posts: