யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள் வெட்டு!

Tuesday, May 2nd, 2017

கொக்குவில் பிடாரி கோவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலையடுத்து, வீதியில் சென்றவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஞாயிரன்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து குறித்தப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இரு இளைஞர்களுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இதன் போது அருகில் இருந்த இளைஞர்கள் குறித்த இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். எனினும், கேணியடியை சேர்ந்த இளைஞர் ஒன்பது பேர் கொண்ட குழுவுடன் வந்து, தன்னோடு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டவரை தாக்குவதற்கு தேடியுள்ளார்.

இந்நிலையில், வீதியில் சென்றவர்கள் மீதும் குறித்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது தாக்குதலுக்கு இலக்கான வான் சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: