யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் கம்பஹாவில் விபத்து!
Monday, September 2nd, 2024
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (02) அதிகாலை 3.45 இற்கு இந்த விபத்து கம்பஹாவில் நடந்துள்ளது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக பயணித்த அதிசொகுசு பஸ் மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பஸ் சாரதியின் இந்த பொறுப்பற்ற செயல் தொடர்பில் அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
000
Related posts:
தேங்காய் விற்போர் மீது சட்ட நடவடிக்கை!
ஜனாதிபதி தலைமையில் நாளை கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி - ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தீர்க்கம...
கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்...
|
|
|


