யாழ்ப்பாணத்திற்கான ‘யாழ் நிலா’ சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பம்!

Saturday, August 5th, 2023

வடக்குக்கான ‘யாழ் நிலா’ சொகுசு ரக சுற்றுலா தொடருந்து சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை இந்த தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதில் சர்வதேச சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து இரவு 10 மணியளவில் புறப்படவுள்ள ‘யாழ் நிலா’ தொடருந்து சேவை மறுநாள் அதிகாலை 5.52 அளவில் காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன் இரவு 9.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ள இந்த தொடருந்து மறுநாள் அதிகாலை 5.36 அளவில் கல்கிசை தொடருந்து நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கோவில் மகோற்சவ திருவிழா காலத்தை முன்னிட்டு தினமும் இந்த ரயில் சேவை நடத்தப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினமும் ரயில் சேவை ஒன்றை ஆரம்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில் பந்துல குணவர்தனவிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: