யாழிலிருந்து இந்தியப் பிரதமருக்கு இந்து அமைப்புக்கள் கடிதம்!
Thursday, July 25th, 2019இலங்கையில் இந்துக்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களும், வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யாழிலுள்ள இந்து அமைப்புக்கள் கூட்டாக கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.
சில தினங்களின் முன்னர் யாழிலுள்ள இந்து அமைப்புக்கள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஒன்றாக சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்பின்னர், அனைவரும் யாழிலுள்ள இந்திய துணை தூதரகத்திற்கு சென்று, துணைத்தூதரை சந்தித்து பேசினர்.
இதன்போது, துணை தூதரின் ஆலோசனையின் பேரில், நரேந்திர மோடிக்கு மேற்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!
உதவித்திட்டங்கள் வழங்கப்படும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - ஈ.ப...
நாட்டின் பல இடங்களில் மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!
|
|