மே 11 இல் பல்கலைக்கழக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – பல்கலை மானிய ஆணைக்குழு!
Sunday, April 12th, 2020எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழங்கள் மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 4ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அழைக்கப்பட்டு அடுத்த செயற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்தப்படும்.
மே மாதம் 11ஆம் திகதி இறுதியாண்டு மாணவர்களுக்கும் 18 ஆம் திகதி ஏனைய மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆயுதம் இருப்பதாக சந்தேகம் : புலோலியில் இராணுவம் தேடுதல் நடவடிக்கை!
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் - பொது...
யாழ்ப்பாணத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை - போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவ...
|
|