மே மாதம் 7ஆம் திகதி தொழிலாளர் தினம்!
Thursday, March 29th, 2018வெசாக் பண்டிகை அனுஷ்டிக்கப்படும் வாரத்தில் உலக தொழிலாளர் தினமும் வருகின்றமையால் இது தொடர்பாக மஹாநாயக்கர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மே மாதம் 7ஆம் திகதி மேதினத்தைக் கொண்டாடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை அமரபுர மஹா சங்க சபாவின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள இலங்கை அமரபுர மஹா நிக்காயாவின் சூலங்கந்தி பீடத்தின் மஹாநாயக்கர் அதி சங்கைக்குரிய கங்துனே அஸ்ஸஜிதேரருக்கான உரிமைப்பத்திரத்தைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உலகம் முன்னேறியுள்ள போதிலும் மனித உள்ளங்களைஆறுதல்படுத்தி ஒழுக்கம் மிக்க சமூகமொன்றை கட்டியெழுப்ப அது துணைபுரியவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|