மூளை அழுகல் நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிப்பு!

Sunday, April 23rd, 2017

அல்சைமர்ஸ், பார்கின்ஸன்ஸ் உள்ளிட்ட மூளையை மோசமாக பாதிக்கும் நோய்களை கட்டுப்படுத்தவல்ல இரண்டு புதிய மருந்துகளை கண்டுபிடித்திருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இதில் ஒரு மருந்து மன அழுத்த நோயாளிகளுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்படுகிறது. இன்னொரு மருந்து எலிகளிடம் நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த மருந்து மனிதர்களின் பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

மோசமான மூளை நோய்களை குணப்படுத்துவதில் இந்த புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது

Related posts: