மூன்று தினங்களுக்குள் தபால்மூல வாக்குச்சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் – அஞ்சல் திணைக்கள ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, July 6th, 2020

தபால் மூலம் வாக்குகளை அளிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் நாடுமுழுவதும் உரிய அத்தாட்சிட்சிப்படுத்தலுடன் பகிர்ந்தளிக்கப்படும் என அஞ்சல் திணைக்களத்தின் ஆணையாளர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

ஓகஸ்ட் மாதம்  5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு, எதிர்வரும் 13ஆம், 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அரசாங்க ஊழியர்கள், எதிர்வரும்  ஜூலை மாதம் 20ஆம், 21ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமைமுதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வாக்குச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுவிடும் என அஞ்சல் திணைக்களத்தின் ஆணையாளர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளதார்.

அத்துடன் உரிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட அத்தாட்சி அதிகாரி ஊடாக வாக்குச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகத்தின் பணிப்பாளர் ரஞ்சனி லியனகே தெரிவிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது

Related posts:

நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு -   டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையால்...
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதற்கான தடைகளை நீக்குங்கள் – த...
2024 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெர...