மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, November 28th, 2023

நாட்டில் மூடப்பட்டுள்ள மற்றும் மூடப்படும் நிலையில் காணப்படும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது, நாட்டில் சுமார் 30 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 100ற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: