முதலமைச்சர் – சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் வவுனியாவில் மோதல்!
Monday, June 19th, 2017
முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோதலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் வருகைதந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை தொடர்பில் கவலையடைந்த ஐ.நா பொதுச் செயலாளர்!
தேர்தல் சட்ட விதி மீறல் குற்றச்சாட்டில் பதினேழு வேட்பாளர்கள் கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு...
எதிர்வரும் சில வாரங்களில் அரிசி விலையில் விரைவில் மாற்றம்!
|
|
|




