மீள்குடியமர உதவுமாறு வலி.வடக்கு நலன்புரி முகாம் மக்கள் ஜேர்மனிடம் கோரிக்கை!

Saturday, April 9th, 2016

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று(9) வலிகாமம் வடக்கு உயர்பாதுப்பு வலயம் மற்றும் நலன்புரி முகாம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளது.

வடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து பார்வையிடுவதற்காக இந்தக் குழு விஜயம் செய்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நல்லெண்ண நடவடிக்கைகள் குறித்து பார்வையிடும் நோக்கில் யாழ்ப்பாணம் சென்றுள்ள இந்தக் குழு ஆட்சிமாற்றத்தின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் மீள்குடியேறிய மக்களின் நலன்கள், தேவைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளது.

வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கோணப்புலம் நலன்புரி முகாமிற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதன்போது தமது மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொண்டு தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts:


புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட தயார் - அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உ...
'எரோப்லொட்' விமானத்துக்கான தடையை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய திகதியிடப்பட்டது!
வருகின்றது பெற்றோல் ஏற்றிய கப்பல் - வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கும் நிலையங்களை...