மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் – தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, July 6th, 2023

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு கிலோ கிராம் மீனின் விலையானது 3000 ரூபாவாக உயர்ந்துள்ளது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் மீன்பிடியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே தற்போது கோழி இறைச்சியின் விலை உயர்வதற்கும் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேலும் மீன்பிடி குறைவடைந்ததன் விளைவாக அதிக தேவை காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்லை. கோழியின் விலையை அதிக அளவில் உயர்த்துவது நியாயமற்றது.

விரைவில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முட்டை உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்புவதால், மூன்று மாதங்களுக்குள் முட்டை தட்டுப்பாடும் தீர்க்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை - பிரதமர் ம...
அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கே செலவ...
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாட்டில் அறிவார்ந்த அரசியல்வாதிகள் இல்லை - இலங்கை வாகன இறக்குமதியாள...

நாடுமுழுவதும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு - ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!
அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடன் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் - எதிர்வரும் 29 ஆ...
அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு - கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர...