மீண்டும் விலை குறைக்கப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்கள்!
Friday, June 30th, 2023மூன்று அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விலை குறைப்பு இன்று (30) தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, “ஒரு கிலோ வெள்ளை அரிசி 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 165 ரூபாவாகும்.
ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 168 ரூபாவாகும்.
ஒரு கிலோ சிவப்பு அரிசி 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 137 ரூபாவாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாட்டில் அடையாளம் காணப்படாத 3,500 காச நோயளர்கள் உள்ளனர் - சுகாதார அமைச்சு !
எச்.ஐ.வி வைரஸை வெற்றிகரமாக அகற்றிய நிபுணர்கள்!
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - பிரதமர் தினேஸ் குணவர்தன சந்திப்பு - அபிவிருத்தியின் அனைத்து துற...
|
|