மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்!
Friday, March 2nd, 2018
தற்போது இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில்இ வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம்தெரிவித்துள்ளது.
அதற்கமைய எஞ்ஜின் திறன் குறைவான வாகனத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவினாலும் எஞ்ஜின் திறன் அதிகமான வாகனங்களின் விலை ஒன்றரை அல்லது இரண்டு இலட்சம்ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெகன்ஆர் வாகனம் ஒன்று ஒரு இலட்சம் ரூபாவாலும்இ டொயோட்டா விட்ஸ் வாகனம் இரண்டு இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்கப்பட்ட பெறுமதியுடன் விற்பனைசெய்யப்படவுள்ளது.
மேலும் அரசியலில் கடந்த நாட்களில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்ததோடு அதன் தாக்கத்தால் வாகனங்களின் விலை பாரியளவில்அதிகரித்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தேசிய அடையாள அட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்!
அபாய நிலையை நோக்கி இலங்கை – எச்சரிக்கிறார் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர்!
தபால் ஊழியர்களின் பற்றாக்குறை - நாட்டின் சில பகுதிகளில் தபால் விநியோகம் தாமதமடைந்துள்ளதாக தபால் மா...
|
|