மீண்டும் வளர்ச்சியை நோக்கி மோட்டார் வாகன பதிவுகள்!
Monday, May 8th, 2017
கடந்த மூன்று மாதங்களுக்குள் நாட்டின் வாகன பதிவுகள் பாரிய வளர்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் மாதம் மாத்திரம் 39,173 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களே இவற்றுள் அதிக வளர்ச்சியை காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பெப்ரவரி மாதத்தினுள் புதிய மோட்டார் வாகனங்கள் 786 பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது இந்த மாதத்தினுள் 936 வரை அதிகரித்துள்ளது.அத்துடன் மோட்டார் வாகனங்களின் பதிவுகளும் பெரிய அளவிலான வளர்ச்சியை காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பெப்ரவரி மாதத்தில் பதிவாகிய 1362 என்ற அளவுடன் ஒப்பிடும் போது அது 2025 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அரச நியமனங்களுக்கான வயதெல்லை வடக்கில் அதிகரிப்பு!
2030 க்குள் டீசல் மற்றும் உலை எண்ணெயைப் பயன்பாடு நிறுத்தப்படும் - மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரு...
அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு!
|
|
|


