மீண்டும் கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு!

Wednesday, April 11th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று மீண்டும் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அமைச்சர்கள் ஆதரித்தாமை மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

Related posts: