மீண்டும் இபோலா உயிர்கொல்லி நோய்: 17 பேர் பலி!

Friday, May 11th, 2018

தென் ஆபிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் இபோலா வைரஸ் நோய் ஏற்பட்டுள்ளதால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிலையம் அறிவித்துள்ளது.

1976 ஆம் ஆண்டுகளில் இருந்து தென்னாபிரிக்காவில் கொடூரமான நோயாக கருதப்பட்ட இந்த வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது தென் ஆபிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் இபோலா நோய் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு இறந்த 21 பேரின் உடலைசோதனை செய்து பார்த்ததில் இபோலா வைரஸ் பரவி வருகிறது என உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நோயினைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த நோய்க்கான  கிருமித் தொற்று ஏற்பட்ட இரண்டு நாட்களில் காய்ச்சல், கரகரப்பான தொண்டை, தசை வலிகள் மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் ஆரம்பிக்கின்றன. குறிப்பாககல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடு குறைந்து போனதைத் தொடர்ந்து வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த நிலையில் சிலருக்குஇரத்தக்கசிவு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

இந்தக் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் இரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்பப்படுகின்றது பழம் தின்னும் வௌவால்கள் கிருமியைப் பரப்புவதாக கூறப்படுகிறது.

இதற்கு தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். முறையான சிகிச்சை மூலம் நோயாளியை சில நாட்கள் உயிர்வாழ வைக்கலாம் என கூறப்படுகிறது.

Related posts: