மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களிடம் யோசனை – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை!
Tuesday, January 17th, 2023இலங்கை மின்சார சபையினால் திட்டமிடப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனைகளை இன்று முதல் எதிர்வரும் 21 நாட்களுக்குள் முன்வைக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.
இந்த வருடத்திற்காக 66.2 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து அண்மையில் அமைச்சரவை யோசனை முன்வைத்திருந்தது.
அந்த கட்டண திருத்தம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது எதிர்ப்புகள் இருக்குமாயின் எழுத்துமூலம் அறியப்படுத்துமாறு அந்த ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
பின்னர், அந்த அறிவிப்புக்கள் ஆராயப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்குக் காய்ச்சலால் கிண்ணியாவில் உயிரிழப்பு அதிகரிப்பு!
அமைச்சரவையில் மௌனமாகயிருந்தவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்- அமைச்சர் நாமல் சுட்டிக்காட்...
மன்னார் மாவட்டத்தில் கடும் மழை - பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின – 12 ஆயிரத்து 350 பேர் பாதிப்பு!
|
|