மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்!

Sunday, May 20th, 2018

இலங்கையின் மீள்சக்தி பிறப்பாக்கி மூலம் 2020ஆம் ஆண்டளவில் மொத்த மின் உற்பத்தியை 35 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள்   தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீள் சக்தி பிறப்பாக்கல் முயற்சிகளை துரித கதியில் முன்னெடுப்பதற்கான அவசியம் உள்ளதாக அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதி புனித ஸ்தலத்தில் இடம்பெற்ற விசேடநிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

போதியளவு மழை பெய்யாத காலத்தில் மீள் சக்தி பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: