மின்சார சபைக்கு 50 பில்லியன் ரூபாய் நிலுவையை செலுத்தியது எரிசக்தி அமைச்சு – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, July 10th, 2020

இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 85 பில்லியனில் 50 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையினை எரிசக்தி அமைச்சு வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் விளைவாக உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததால், நிதி அமைச்சின் கருவூலத்தின் கீழ் ஒரு விசேட நிதியத்தில் இருந்து பெறப்பட்ட நிதியை கொண்டு கடன் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் முடக்க நிலைக்கு மத்தியில் மின்சார கட்டணங்களை சலுகைகளை வழங்குவைத்து குறித்து அரசாங்கம் பொருத்தமான முடிவை எட்டும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளாளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு செப்டெம்பர் முதல் நேரடி விமான சேவை - இராஜாங்க அமைச்சர் அசோக் அப...
நாடு முழுவதும் நாளைமுதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது - இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினம் - பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர’ அறிவிப்பு!