மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு! .
Wednesday, June 26th, 2024
மாங்குளம் – பனிச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு (25) ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் மீது பாரவூர்தியொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது பின்னால் பயணித்த பாரவூர்தி மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மோசடியாக முறையில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர - ராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ...
வடக்கு பாடசாலைகளுக்குரிய ரூ.87.5 மில். கைநழுவிப் போனது! மாகாண சபையின் பிடிவாதமே காரணம்!
மக்களிடம் மன்னிப்பு கோரினார் எரிசக்தி அமைச்சர் - அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருள் நிலையங்க...
|
|
|


