மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் பொக்குவரத்து சேவைகள் நாளைமுதல் மீண்டும் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, July 31st, 2021

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை நாளை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பயணிகளுக்காக இவ்வாறு போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பேருந்து மற்றும் தொடருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள், அத்தியாவசிய சேவைகளை கடந்த 14 ஆம் திகதி தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

எனினும், கொவிட் பரவல் நிலைமைய கருத்திற்கொண்டு கடந்த 17 ஆம்திகதிமுதல் நாளை முதலாம் திகதிவரை குறித்த சேவைகளை இடைநிறுத்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்முதல் பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டால் நாளைமறுதினம் 2 ஆம் திகதிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னதாக இராஜாங்க அமைச்சர் தெரவித்திருந்தார்.

எனினும், தற்போது நாளைமுதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: