மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளர்- இராணுவ தளபதி சந்திப்பு!
Sunday, April 22nd, 2018
மலேசியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளரான ஏ.ஜே.எம் முசும்மிலை சந்தித்தார்.
மலேசியா கோலலம்பூரில் நடைபெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்சியின் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டில் இலங்கை இராணுவ தளபதி கலந்து கொண்டதை பற்றியும் அதன் அனுபவங்கள் தொடர்பிலும்; இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பினை நினைவுகூறும் முகமாக இலங்கை இராணுவ தளபதி;யினால் மலேசியா உயர் ஆணையாளருக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
Related posts:
உன்னிப்பாக கவனிக்கும் கஃபே அமைப்பு!
ஊரடங்கை மீறிய குற்றத்தில் இதுவரை 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனை...
தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை - அரசியல...
|
|
|


