மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளின் போது அவசரகால கொள்முதல் விதிமுறைகளை மீறவில்லை – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Thursday, December 29th, 2022

மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளின் போது அவசரகால கொள்முதல் விதிமுறைகளை மீறவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களில் இருந்து டெண்டர் கோராமல் மருந்துகளை இறக்குமதி செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: