மத்­திய வங்கி பிணை­முறி தொடர்பான கோப்­ கு­ழுவின் அறிக்கை இன்று!

Tuesday, October 25th, 2016

இலங்கை மத்­திய வங்­கியின்   பிணை­முறி வழங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குற்றச்­சாட்டு சம்­பந்­தப்­பட்ட கோப் குழுவின் அறிக்கை இன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப் பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

பிணை­முறி விவ­காரம் தொடர்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பாரா­ளு­மன்ற கட்டடத்தொகுதியில் கோப் குழு கூடி­யது. இதன்­போது பெரும் வாதப் பிர­தி­வா­தங்கள் ஏற்­பட்­டன.

இந்­நி­லையில் பிணை­முறி விவ­காரம் தொடர்பில் வெவ்வேறு அறிக்­கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரி­ய­வ­ரு­கின்­றது.எனினும் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான முக்­கிய அறிக்கை இன்­றைய தினம் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்­துன்­நெத்­தி­யினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

cope

Related posts: