மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை இன்று!
Tuesday, October 25th, 2016
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட கோப் குழுவின் அறிக்கை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவுள்ளது.
பிணைமுறி விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கோப் குழு கூடியது. இதன்போது பெரும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் வெவ்வேறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.எனினும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான முக்கிய அறிக்கை இன்றைய தினம் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து!
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்க விஷேட ஏற்பாடு – இலங்கை போக்குவரத்...
கனடாவின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!
|
|