மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது!

நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்தி கைதான வாகன சாரதிகளின் எண்ணிக்கை 6136 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூலை மாதம் 05ம் திகதி முதல் இன்று(29) வரையிலான விசேட சுற்றிவளைப்பிலேயே குறித்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(28) காலை 06 மணி முதல் இன்று(29) காலை 06 வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 212 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நன்கொடை!
வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு கட்டாய ஆலோசனை வகுப்புகள் - வீதிப் பாதுகாப்பு பிரிவு எஸ்.எஸ்.பி இந...
பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர் இணையவாயிலாக தரவிறக்கம் செய்யுங்கள் - பரீட்சைகள் ஆணையாளர் நாயக...
|
|