மக்கள் வெளிநாட்டுகளுக்கு செல்வது பிரச்சினைக்குரிய விடயமல்ல – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
Sunday, November 7th, 2021மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரியதல்ல என்றும், அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும், வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
அது தவறான விடயமில்லை. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் எப்போதும் அந்த நாடுகளிலேயே வாழ்வதில்லை. இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புகின்றனர்.
அத்துடன், நாட்டுக்குப் பெருமளவான அந்நிய செலாவணியை அவர்கள் பெற்றுத் தருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு!
இந்திய இழுவைப் படகுகளின் எல்லைதாண்டும் அத்துமீறலை கண்டித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தீவக கடற...
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்று...
|
|