மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே இரணைதீவில் கொவிட் சரீரங்களை அடக்கம் செய்ய தீர்மானம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன!
Thursday, March 4th, 2021
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா சரீரங்கள் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கி கடந்த 25 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தது.
அதன் பின்னர் குறித்த சடலங்களை அடக்கம் செய்வதற்காக இரணைதீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
எனினும் இரணைதீவில் கொரோனா சரீரங்களை புதைப்பதற்கு எதிராக அந்த பகுதிகள் மக்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மடு திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் - மன்னார் மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு!
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இன்றுமுதல் கடவுச்சீட்டு விநியோகம் - குடிவரவு மற்றும் கு...
இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிற்காக 11 இராணுவ வாகனங்களை கையளித்து சீனா!
|
|
|


